search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் I.N.D.I.A கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறி இருக்க வேண்டும்- சீமான்
    X

    தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் I.N.D.I.A கூட்டணியில் இருந்து தி.மு.க வெளியேறி இருக்க வேண்டும்- சீமான்

    • எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது
    • மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது.

    கிருஷ்ணகிரி:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதலஅமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் தான் பேசி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதன் பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதிவாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இது குறித்து பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம், பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா. தேர்தல் வரும் போது மட்டும் நம் மீது பாசம், அக்கறை, பற்று, விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது, பிற கட்சியை சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சனையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை. இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்த வேண்டும்.

    பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய பிறகு, அ.தி.மு.கவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததாக என்ற கேள்விக்கு, அழைப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள் இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் பேச வேண்டும். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன். 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜகவினர் தான் சொன்னார்கள்.

    கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார். சாலையை முறையாக போடுங்கள். நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஜி20 மாநாடு, காமன்வெல்த் போட்டிகள் நடந்த போது, பதாகைகள் வைத்து குடிசைகளை மறைத்தனர். ஒரே நாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால், முதலில் இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என யாரை முதலில் குடியேற்றுவீர்கள். உங்களை குடி அமர்த்த விட்டுவிட்டு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×