search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அட்சய திருதியை- கோவை மாநகரில் ஒரே நாளில் ரூ.36 கோடிக்கு தங்கம் விற்பனை
    X

    அட்சய திருதியை- கோவை மாநகரில் ஒரே நாளில் ரூ.36 கோடிக்கு தங்கம் விற்பனை

    • அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
    • கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது.

    கோவை:

    பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அட்சயதிருதியை 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்றும், இன்று அட்சய திருதியை கொண்டாடப்பட்டது.

    அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளான நேற்றும், இன்றும் கோவையில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளிலும் தள்ளுபடி விற்பனை செய்யப்பட்து. நகைக்கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து, அதனை அணிந்து பார்த்து வாங்கி சென்றனர்.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 2 நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுவதாகவும், வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது.

    விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான நகைகளை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டினர். வளையல், பிரேஸ்லெட், தோடு, தொங்கல் உள்ளிட்ட நகைகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் ரூ.36 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த ஆண்டு மொத்த விற்பனை 100 கிலோவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தங்க நகை கடையில் நகை வாங்க வந்த மக்கள் கூறியதாவது:-

    அட்சய திருதியை தினத்தில் விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    தங்கத்தில் முதலீடு செய்வது என்றும் பயன்தரக்கூடியது.

    தங்கம் சிறந்த முதலீடாகவே காலம் காலமாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதால் தங்க நகை சேமிப்புக்கு வழிவகை செய்வதாகவே கருதுகிறோம்.

    எங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப அரை கிராம், ஒரு கிராம் தங்க நகைகளை வாங்கி உள்ளோம். விலை அதிகம் என்ற போதும் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் நகைகள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×