அதிமுக செய்தி தொடர்பாளராக வக்கீல் சசிரேகா நியமனம்

அதிமுக செய்தி தொடர்பாளராக வக்கீல் சசிரேகாவை நியமனம் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த வக்கீல் சசிரேகா இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com