மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா?.. பெரும்பான்மையை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை!

காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கும் மம்தா?.. பெரும்பான்மையை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலை!
Published on

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 294 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதி தவிர்த்து 293 இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக 159 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

பபானிபூர் தொகுதியில் மம்தாவை பின்னுக்கு தள்ளி பாஜகவின் முதல்வர் முகம் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். நந்திகிராமிலும் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.

மேற்கு வங்கத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போதைய நிலவரடி 159 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜி தலைமையிலான 14 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என கருதப்படுகிறது.

அண்மையில் அங்கு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 89 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com