தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது- மத்திய அரசு

தக்காளி விரைவில் அழுகிவிடக்கூடிய பொருள். அதனை பதுக்கி வைத்து விலையை உயர்த்த முடியாது.இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் தக்காளி விலை குறைய தொடங்கும்.
தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது- மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் தக்காளி விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித்குமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தக்காளி விரைவில் அழுகிவிடக்கூடிய பொருள். அதனை பதுக்கி வைத்து விலையை உயர்த்த முடியாது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த திடீர் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல இடங்களுக்கு தக்காளி விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் தக்காளி விலை குறைய தொடங்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com