என் மலர்
இந்தியா

2 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 98 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 617 பேர் மீண்டுள்ளனர்.
- தற்போது 1,764 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 111, நேற்று 128 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 122 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 98 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 617 பேர் மீண்டுள்ளனர்.
தற்போது 1,764 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,741 ஆக நீடிக்கிறது.
Next Story