search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது
    X

    இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது

    • கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 90 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 450 பேர் குணமடைந்துள்ளனர்.
    • இன்றைய நிலவரப்படி 1,921 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 5 அதிகமாகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. அதன்பிறகு 6 நாட்களாக பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 85 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவின் பிடியில் இருந்து நேற்று 90 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 450 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 1,921 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 5 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் தொடர்ந்து 2-வது நாளாக புதிய உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,761 ஆக உள்ளது.

    Next Story
    ×