என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
169 பேருக்கு புதிதாக தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 140 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 218 ஆக இருந்தது. நேற்று 185 ஆக குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 140 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 343 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த எண்ணிக்கை நேற்றை விட இன்று 28 அதிகரித்துள்ளது. அதாவது 2,257 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்பு இல்லை. அதேநேரம் கேரளாவில் விடுபட்ட பலிகளில் ஒன்றை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,771 ஆக உயர்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்