search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் 2 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்தது
    X

    இந்தியாவில் 2 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 200-க்கும் கீழ் குறைந்தது

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 247 பேர் நலம் பெற்றுள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 228-ஆக இருந்த நிலையில் நேற்று 214-ஆக சரிந்தது. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 247 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,423 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 86 குறைவாகும்.

    தொற்று பாதிப்பால் கடந்த 2 நாட்களாக தலா 2 பேர் உயரிழந்த நிலையில் நேற்று எந்த மாநிலங்களிலும் புதிதாக பலி இல்லை. அதே நேரம் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,720 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×