என் மலர்
இந்தியா

மேலும் 142 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 3 பேர் பலி
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 107 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 258 பேர் குணமடைந்தனர்.
- ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 32 அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 116 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 917 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 107 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 258 பேர் குணமடைந்தனர்.
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்றை விட 32 அதிகரித்துள்ளது. அதாவது தற்போது 1,899 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் கடந்த 2 நாட்களாக உயிரிழப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் 3 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,760 ஆக உயர்ந்துள்ளது.
Next Story






