search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிதாக 113 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்வு
    X

    புதிதாக 113 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்வு

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 88 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 801 பேர் குணமடைந்துள்ளனர்.
    • தற்போது 1,817 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 25 அதிகமாகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 88 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 801 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 1,817 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 25 அதிகமாகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,745 ஆக நீடிக்கிறது.

    Next Story
    ×