search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது
    X

    3 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் 100-ஐ தாண்டியது

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துள்ளனர்.
    • தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,781 ஆக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 91, 89, 96 என்ற அளவிலேயே இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 111 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 219 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,781 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசத்தில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,748 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×