video-"நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னுயிர் ஈந்த உன்னதத் தலைவர்"-டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி நினைவு அஞ்சலி!

காஷ்மீரில் சிறைக்காவலில் இருந்தபோது இவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
PM Modi pays memorial tribute to Dr.Syama Prasad Mukherjee
Published on

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், இந்தியாவின் சிறந்த தேசியவாதத் தலைவருமான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை (பலிதான் திவஸ் / தியாகி தினம்) முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்குத் தங்களது நெஞ்சார்ந்த அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் உருக்கமான பதிவு:

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் தியாகத்தைப் போற்றி சமஸ்கிருத ஸ்லோகத்துடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். "செயலாலோ, சந்ததியாலோ அல்லது செல்வத்தாலோ ஒருவன் அழியா நிலையை அடைவதில்லை. தியாகத்தினால் மட்டுமே அதை அடைய முடியும். துறவிகள் நுழையும் இதயக் குகைக்குள் மறைந்திருக்கும் அந்த உன்னத உண்மை, பிரகாசமாக ஒளிர்கிறது."

மேலும், "தேசத்திற்கும் சமுதாயத்திற்கும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சுயநலமின்றி அர்ப்பணித்த நாட்டின் மாபெரும் ஒளிவிளக்கு டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலிகள். அவரது கூர்மையான சிந்தனைகளும், கொள்கைகளும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் தொழில் மற்றும் விநியோகத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி, கொள்கை முரண்பாடுகள் காரணமாகத் தனது மந்திரி பதவியைத் துச்சமாகக் கருதி ராஜினாமா செய்தார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை (பிரிவு 370) கடுமையாக எதிர்த்த அவர், "ஒரு நாட்டில் இரண்டு கொடிகள், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு அரசியலமைப்புகள் இருக்கக் கூடாது" என்று முழங்கினார்.

காஷ்மீருக்குள் நுழைய அனுமதிச் சீட்டு தேவை என்ற சட்டத்தை எதிர்த்துப் போராடி, அனுமதி இன்றி காஷ்மீருக்குள் நுழைந்தபோது அவர் கைது செய்யப்பட்டு, 1953 ஜூன் 23 அன்று சிறைக்காவலில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இந்த உயிர்த்தியாகமே காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைய அடித்தளமாக அமைந்தது.

பாஜக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் இந்த நாளை 'பலிதான் திவஸ்' நாடாக நாடு முழுவதும் கடைப்பிடித்து வருகின்றன. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க, தனது வாழ்வையும் பதவியையும் தியாகம் செய்த சியாம பிரசாத் முகர்ஜியின் வழியைப் பின்பற்றி தேசப்பணியாற்ற இத்தினத்தில் தலைவர்கள் உறுதியேற்றுள்ளனர்.

தேச ஒற்றுமைக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்த சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு நாளில், அவரது தியாகக் கொள்கைகள் வருங்காலத் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும் எனப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com