

பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் 9-ந் தேதி விமான மூலம் ஐதராபாத் வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செகந்திராபாத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பொது கூட்டத்திற்கு பிறகு காசிபேட்டை ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை, வாரங்கல்லில் உள்ள ஜவுளி பூங்கா, பி.பி.நகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட விடுதி கட்டிடங்கள், முலுகுவில் உள்ள சம்மக்கா- சரளம்மா பல்கலைக்கழகம் மற்றும் கம்பம் தேவரப்பள்ளி பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.