

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.
* மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும். தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
* கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சமையல் செய்வதை குறையுங்கள்.
* வெயிலில் நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம்.
* மது, தேநீர், காபி, குளிர்பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.
* அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.