search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

    • 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.
    • நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கும் தின கூலியை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடி நிதி உயர்த்தி ஒதுக்கப்பட்டது.

    நிதியாண்டு வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளதால், அதே தேதியில் இந்த அரசாணை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டிற்கு 8.5 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.319 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×