டெல்லி விமான நிலையத்தில் விமானத்தின் எஞ்சின் தீப்பிடித்ததில் 6 பேர் படுகாயம்

எமர்ஜென்சி பாதையில் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் விமானத்தின் எஞ்சின் தீப்பிடித்ததில் 6 பேர் படுகாயம்
Published on

டெல்லியில் இருந்து ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகருக்கு புறப்பட்ட விமானத்தின் எஞ்சின் பழுதாகி தீப்பிடித்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் வேகமெடுத்தபோது, அதன் எஞ்ஜின்களில் ஒன்று பழுதடைந்து தீப்பிடித்தது.

விமானத்தில் இருந்து கரும்புகையும், தீப்பிழம்புகளும் வெளியேறுவதை கண்டு ஊழியர்கள் அவசர கால வெளியேற்ற நடவடிக்கையைத் தொடங்கினர்.

எமர்ஜென்சி பாதையில் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com