என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு
Byமாலை மலர்26 Oct 2021 5:14 AM GMT (Updated: 26 Oct 2021 6:15 AM GMT)
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,664, தமிழ்நாட்டில் 1,112, மகாராஷ்டிராவில் புதிதாக 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவு ஆகும் .
கொரோனா பாதிப்பால் மேலும் 356 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை உள்பட 281 மரணங்கள் அடங்கும்.
மொத்த பலி எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,028 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
நாடு முழுவதும் நேற்று 64,75,733 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 102 கோடியே 94 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 11,31,826 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,428 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 42 லட்சத்து 2 ஆயிரத்து 202 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,664, தமிழ்நாட்டில் 1,112, மகாராஷ்டிராவில் புதிதாக 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் கடந்த 1 ½ ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவு ஆகும் .
கொரோனா பாதிப்பால் மேலும் 356 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை உள்பட 281 மரணங்கள் அடங்கும்.
மொத்த பலி எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்தது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,028 பேர் அடங்குவர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,951 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 83 ஆயிரத்து 318 ஆக உயர்ந்தது.
தற்போது 1,63,816 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 241 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 11,31,826 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
மொத்த பரிசோதனை எண்ணிக்கை 60 கோடியே 19 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்... மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுங்கள்- ஓ.பன்னீர்செல்வம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X