என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனிப்பட்டா வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
- லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
- பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது சகோதரி ஜானகி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதால் தனது தம்பி பாலகிருஷ்ணனுக்கு பட்டா பிரித்து தர ஜானகி முடிவு செய்தார்.
இதையடுத்து அந்த இடத்தின் பட்டாவை பிரித்து தர கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவரும், நில அளவையரும் அந்த இடத்திற்கு சென்று நிலத்தை அளந்துள்ளனர். பின்னர் பாலமுரளி தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுரளி அதை சரிபார்த்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுரளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்