

சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் மீனவ சமுதாய மக்களின் வாழ்க்கையைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் உலக மீனவர்கள் தினம் இன்று.
மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களாலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களாலும் மிகுந்த இன்னல்களுக்குள்ளாகி வரும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.