search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமலாக்கத்துறை காவலுக்கு எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு
    X

    அமலாக்கத்துறை காவலுக்கு எதிர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு

    • 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்.
    • வருகிற 26-ந்தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைதான செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து வருகிற 26-ந்தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனே நீதிமன்ற உத்தரவுப்படி செந்தில் பாலாஜி உடனடியாக புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். .

    இந்நிலையில், அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×