தூத்துக்குடிக்கு செங்கோட்டையன் திடீர் வருகை

திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை.
தூத்துக்குடிக்கு செங்கோட்டையன் திடீர் வருகை
Published on

தூத்துக்குடி:

அ.தி.மு.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தார்.

அவருடன் வேறு யாரும் வரவில்லை. பின்னர் அவர் தனியாக காரில் ஏறி சென்றார். முன்னதாக சென்னையில் தனது பயணம் குறித்து கூறும்போது அவர், திருச்செந்தூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை. அறிவிக்கப்படாத அவரது வருகை அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com