search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

    • தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நெல்லை:

    தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க.

    தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். வி. சுரேஷ், மண்டல சேர்மன் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்துச் சின்னத்துரை, ஜெனி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வா கிகள் பூக்கடை சப்பானி முத்து, பி.ஆர்.பி. ராஜா, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஜோதிபுரம் ஊர் நாட்டாண்மை தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் அருள் ராஜ் ஆகியோரது தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த தலைவர் லெனின் பாரதி, மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ளை பாண்டியன், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் செய்யது அலி, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுடலை ராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மேலப்பாளையம் செய லாளர் குழந்தைவேலு, வக்கீல் பழனி, செல்வம், ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வளவன் தலைமையிலும், ம.தி.மு.க சார்பில் மனப்படை மணி உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் ஒருங்கி ணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×