என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் டாக்டர் மீது தாக்குதல்- கணவர் கைது
- மருத்துவமனையில் நுழைந்த டேனியல், ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்
- போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் ரேவதி (வயது36). இவர் பிரையண்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் டாக்டராக பணி செய்து வருகிறார். இவர் டேனியல் என்பவரை காதலித்து திருமணம் முடித்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறு வேறுபாடு காரணமாக ரேவதி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார. நேற்று இரவு மருத்துவமனையில் நுழைந்த டேனியல், ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் அதற்கு அவர் மறுக்கவே, அவரை தாக்கி காயப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ரேவதி அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






