search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதபூைஜயையொட்டி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்  விடுமுறை எடுக்க தடை
    X

    ஆயுதபூைஜயையொட்டி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் விடுமுறை எடுக்க தடை

    • வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
    • சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    வருகிற 4-ந்தேதி சரஸ்வதி பூைஜ, ஆயுதபூஜை, 5-ந்தேதி விஜயதசமி, 24-ந்தேதி தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் தொழில் உள்பட முக்கிய நகரங்கள் இடையிலும், தென் மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களின் முன்பதிவும் முடிந்துள்ளது.

    சிறப்பு பஸ்களின் இயக்கம் குறித்து அதிகாரிகள் பட்டியல் தயாரித்து போக்குவரத்து துைற அமைச்சரின் அனுமதிக்கு அனுப்பியுள்ளனர். ஓரிரு நாளில், சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் அறிவிக்க உள்ளார். இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க வசதியாக டிரைவர்கள், கண்டக்டர்கள் விடுமுறை எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுமுறையில் சென்றவர்களில், மருத்துவ விடுமுறை தவிர மற்ற விடு முறைகள் ரத்து செய்யப்பட்டு, இன்று பணியில் இணைய போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×