என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோவில்பாளையம் அருகே குளத்தில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவர் பலி

- சித்தார்த்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
- கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ஏ.எஸ்.குளத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் சித்தார்த் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் சித்தார்த் அவரது நண்பர்களுடன் பள்ளியின் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.
அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது சித்தார்த் ஆழமான பகுதிக்கு சென்றார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடம் கோவில்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தேடினர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் குளத்தில் இருந்து மாணவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் சித்தார்த்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
