என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரு சக்கர வாகனங்கள் மோதி வாலிபர் பலி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கடுகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜதுரை, மனைவி பூங்கோதை (வயது 43). இவர்களது மகன் சதீஷ்(23). இவர்கள் கால்நடைகளுக்கு தீவனம் எடுப்பதற்காக கடுகூர் அயன் சாலையிலுள்ள வயலுக்கு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே அஸ்தினாபுரம் பிரதானச் சாலையில் வசித்து வரும் சின்னப்பா மகன் வேல்முருகன்(31) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் எதிர்பாரத விதமாக இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ், திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து கயர்லாபாத் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X