குமரிஆனந்தன் மகள் என்பதை தவிர தமிழிசைக்கு என்ன தகுதி உள்ளது-அமைச்சர் பொன்முடி

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.
குமரிஆனந்தன் மகள் என்பதை தவிர தமிழிசைக்கு என்ன தகுதி உள்ளது-அமைச்சர் பொன்முடி
Published on

போடி:

தேனி மாவட்டம் போடியில் அமைச்சர் பொன்முடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது. ஆனால் இவரைப்பற்றி தமிழிசை சவுந்திரராஜன் தேவையற்ற கருத்துகளை கூறிவருகிறார்.

குமரிஆனந்தன் மகள் என்பதை தவிர தமிழிசைக்கு என்ன தகுதி உள்ளது. அவர் இல்லையென்றால் தமிழிசையை யார் என்று கூட தெரிய வாய்ப்பில்லை.

அமைச்சர் உதயநிதி இளம் பருவத்திலிருந்தே தி.மு.க.வில் உழைத்தவர். இளைஞர் வழிகாட்டியாக உள்ளார். படிக்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்க நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

படிக்கும் போதே தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் பாடம் நடத்தும் முறையை உருவாக்கியுள்ளார்.

உயர்கல்வி பெறவேண்டும் என்பதற்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் ஐ.டி.ஐ.யிலும், பிளஸ்-2 தேர்ச்சி பெறாதவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சேர்ந்து உயர்கல்வி பெறலாம்.

உயர்கல்வி சுகாதாரம் ஆகியவற்றை 2 கண்களாக கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com