முன்விரோதம் காரணமாக வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு- புதுவை ரவுடி உள்பட 2 பேர் கைது

கவியரசன், சுனிலை பார்த்து ‘உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்’ என கண்டித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.
முன்விரோதம் காரணமாக வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு-   புதுவை ரவுடி உள்பட 2 பேர் கைது
Published on

கண்டமங்கலம்:

புதுச்சேரி ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சுனில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி சினேகாவை பார்க்க, சுனில் கடந்த 8-ந் தேதி சித்தலம் பட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனூரில் உள்ள மதுக் கடையில் மது அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் சுனில், யாசிக் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சுனில், மறைத்து வைத்திருந்தபேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. கவியரசன், சுனிலை பார்த்து 'உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்' என கண்டித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஒரு கறவை மாடு காயம்அடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர்சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோ தம் காரணமாக ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கி சுனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுனில் விக்ரவாண்டி அருகே மதுரப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்ற கணேஷ்ராஜ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் 2 முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com