இதய நோயின் அறிகுறிகள்

உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்
heart disease
இதய நோய்
Published on

மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம்.

* மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசவுகரியம்

* கால்கள் அல்லது கைகளில் வலி, பலவீனம் அல்லது உணர்வின்மை

* கைகள், கழுத்து, தோள்பட்டை, தாடை மற்றும் முதுகில் வலி அல்லது அசவுகரியம்

* மூச்சுத் திணறல்

* உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு செயல்பாட்டின்போது எளிதில் சோர்வடைதல்

* இதய தாளத்தில் மாற்றங்கள்

* மிக வேகமாக அல்லது மெதுவாக இதயத்துடிப்பு, பதற்றம் அல்லது மார்பில் படபடப்பு

* மயக்கம், தலைச்சுற்றல் அல்லது மயக்கம்

* பலவீனம் அல்லது சோர்வு

* கைகள், கால்கள், கணுக்கால் அல்லது கால்களின் வீக்கம்

* தோல் தடிப்புகள் அல்லது அசாதாரண புள்ளிகள்

* உலர் அல்லது தொடர் இருமல்.

மாரடைப்பு அறிகுறிகள்

* கடுமையான மார்பு வலி, இடது கை அல்லது தாடையில் வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்.

பெண்களுக்கும் இந்த சில அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், அவர்களின் வலி அதிகமாகி, தோள்பட்டை, கழுத்து, கைகள், வயிறு மற்றும் முதுகில் பரவுகிறது.

*பெண்கள் அஜீரணம் போன்ற வலியையும் அனுபவிக்கலாம்.

* கடுமையான கவலை, குமட்டல், தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் குளிர் வியர்வை ஏற்படலாம்.

* பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் கடுமையான சோர்வு ஏற்படலாம்.

மனிதனுக்கு இதயம் ஒரு முக்கியமானது ஆகும். இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் பம்ப் செலுத்துகிறது. இது முக்கியமாக 4 அறைகள், 4 வால்வுகள், மற்றும் இதய சுவர்கள் ஆகிய முதன்மைப் பகுதிகளைக் உள்ளன.

ஆபரேசன் இல்லாமலே...

இதய நோய்களுக்கு ஸ்டெண்ட், பைபாஸ் போன்ற பல அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால் எல்லா நோயாளிகளுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுவது இல்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இயல்பான நிலைக்கு கொண்டுசெல்ல இந்த EECP சிகிச்சை உதவும். இதய பிரச்சினைகளில் EECP எவ்வளவு அவசியம். EECP என்பது நாள்பட்ட மார்பு வலி (ஆஞ்சினா) மற்றும் இதய செயலிழப்பு போன்றவற்றுக்கான அறுவை சிகிச்சை இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறையாகும்.

இதன்படி கால்கள், தொடை மற்றும் இடுப்புப் பகுதிகளில் பிரத்யேக காற்று பட்டைகள் பொருத்தப்படும். இதயத் துடிப்பின் தாளத்திற்கு ஏற்ப ECG மூலம் இந்த பட்டைகள் காற்றுடன் விரிந்து சுருங்கும். இது ரத்த ஓட்டத்தை இதயத்திற்குத் திருப்பி, அடைப்புகளைத் தவிர்த்து புதிய ரத்த நாளங்கள் உருவாக உதவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com