தமிழ்நாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது- விக்கிரமராஜா

Published On 2024-05-05 05:50 GMT   |   Update On 2024-05-05 05:50 GMT
16CNI050502024: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங் குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காைல 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொரு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுரை வளையங்குளம் 4 வழிச்சாலையில் அமைந்துள்ள மாநாட்டுத் திடலில் இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பேரமைப்பின் மாநிலத் தலைவவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா முன்னிலையில் மதுரை மண்டலத் தலைவர் டி.செல்லமுத்து மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

41-வது வணிகர் தினம் விடுதலை முழக்க மாநாடாக நடத்தப்படுவதால் இன்று மாலை 4 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேருரையாற்ற உள்ளனர். கவிஞர் வைரமுத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

மாநாட்டில் வேலம்மாள் குழும நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கம், நாகாபுட்ஸ் தலைவர் கமலக்கண்ணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மகாராஜா, டால்மில் நிறுவனர் சந்திரகுமார், ராஜ்மகால் மதுரை முருகானந்த், மதுரை ஜிகர்தண்டா ஜிந்தா, தார் பிரதர்ஸ், கல்யாணமாலை மீரா நாகராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழக அனைத்து வணிகத் தலைவர்கள், பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாநில இணைச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், பழைய பொருள் சங்க நிர்வாகிகள், இளம் தொழில் முனைவோர் அமைப்பினர், மகளிர் அமைப்பினர் மற்றும் விழாக்குழு உறுப்பினர்கள், தமிழக அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகள் என லட்சக்கணக்கானோர் மதுரை மாநாட்டில் குவிந்துள்ளனர்.

மதுரையில் நடக்கும் வணிகர் விடுதலை முழக்க மாநாடு தமிழக வணிகர்களின் ஏகோபித்த ஒற்றுமையை நிலைநாட்டும் மாநாடாகவும், 40 ஆண்டு வணிக வரலாற்றை முத்திரை பதிக்கும் மாநாடாகவும், அகில இந்திய வணிகர் அமைப்பிற்கு வழிகாட்டும் மாநாடாகவும் நிச்சயம் அமையும் என்று மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறி உள்ளார்.

வணிகர்களின் உரிமையைவென்றெடுக்க, பேரமைப்பின் கள நிகழ்வின் நினைவுகளை முன் நிறுத்தும் மாநாடாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளதாக அவர் பெருமைப்பட கூறி உள்ளார். இன்று மாலையில் விக்கிரமராஜா உரையாற்றி முடித்ததும் தீரமானங்கள்நிறைவேற்றப்படுகிறது. மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா மாநாடு தீர்மானங்களை முன்மொழிய தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட வணிகர்களுக்காக சிற்றுண்டி, இரவு உணவு, குடிநீர் வசதிகள் போன்றவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மாநாட்டு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் குவிந்துள்ளனர். வணிகர்களின் வசதி கருதி மாநாட்டில் பங்கேற்கும் வணிகர்களின் கார், வேன், பஸ்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவத்கு விசாலமான இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் பேரமைப்பு தலைமைச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், அனைத்து மண்டலத் தலைவர்களும் திரளாக பங்கேற்றுள்ளனர்.

மேலும் தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என.டி.மோகன், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் கொரட்டூர் த.இராமச்சந்திரன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சாமுவேல், வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், கிழக்கு மாவட்டத் தலைவர் ஆதிகுருசாமி, மாவட்டச் செயலாளர்கள் தேசிகன், சின்னவன், ஜெ.சங்கர், ஷேக் முகைதீன், சத்தியரீகன், பஷீர்அகமது, புரசைநசீர், ஜார்ஜ் டவுன் அனீஸ்ராஜா, ஓட்டேரி செந்தமிழ்செல்வன், மயிலை பாஸ்கர், பெருநகர டீக்கடை சங்க தலைவர் ஆனந்தன், ஹாஜி கே.முகமது, சி.திருமாறன், காவேரி மீரான், தாமோதரன், அயனாவரம் கே.ஏ.மாரியப்பன், என்.ஆர்.மோகன், அண்ணா நகர் சங்கர், மெடிக்கல் சிவக்குமர், எஸ்.எம்.பி.செல்லத்துரை, கடப்பா ரோடு கே.ஆர்.செல்வம், ஆர்.ஜெயபாண்டியன், கந்தன்சாவடி வில்சன், அடையார் பி.பாஸ்கர், செந்தில்குமார், சி.எம்.சாமி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

Similar News