இந்தியா

விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

Published On 2024-05-05 04:25 GMT   |   Update On 2024-05-05 04:25 GMT
  • வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர்.
  • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஷம்ஷா பாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்குள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று புகுந்தது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் அதிகாரிகளுக்கு ஆட்டம் காட்டி வந்தது.

இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் அமைத்த 5 கூண்டுகளில் ஒன்றில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து, கூண்டுகள் சிக்கிய சிறுத்தையை அதிகாரிகள் நேரு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News