பொது மருத்துவம்

கால் ஆணி எதனால் வருகிறது? அதற்கான தீர்வு தான் என்ன?

Published On 2024-05-22 06:45 GMT   |   Update On 2024-05-22 06:45 GMT
  • இறந்த தோலின் கடின மான உருவாக்கம் தான் கால் ஆணி.
  • கத்தி பிளேடு முதலியவைகளைக் கொண்டு சுரண்டி எடுக்கக்கூடாது.

இறந்த தோலின் கடின மான உருவாக்கம் தான் கால் ஆணி ஆகும். பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, வைட்டமின் ஏ சத்துக்குறை பாடு, அதிக உடல் எடை இருப்பவர்கள், கரடுமுரடான தரையில் திடீரென அதிக நேரம் நடப்பது, ஹை ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்து அதிக பளு தூக்குவது, மிகக் கடினமான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால் கால் ஆணி வரலாம்.

எக்காரணம் கொண்டும் ஆணியை கத்தி பிளேடு முதலியவைகளைக் கொண்டு சுரண்டி எடுக்கும் வேலையை செய்யக்கூடாது.

பூண்டு பேஸ்டை கால் ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் அதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் பொருள் கால் ஆணியைக் குணப்படுத்தும்.

படிகக் கல்லை வைத்து நன்றாகத் தேய்த்துவிட்டு தோலை மிருதுவாக்கும் களிம்பை அந்த இடத்தில் தடவவும். பின்னர் மருந்து நிரப்பப்பட்ட கால் ஆணிப் பட்டையை தினமும் அந்த பகுதியின் மேல் ஒட்டி விட வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் கால் ஆணி குணமாக வாய்ப்பு உண்டு.

சில நேரங்களில் சில பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எனவே, கால் ஆணி தானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

Tags:    

Similar News