என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை
Byமாலை மலர்20 Oct 2017 11:49 AM GMT (Updated: 20 Oct 2017 11:49 AM GMT)
பாகிஸ்தான் சென்று டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட மறுக்கும் இலங்கை வீரர்களுக்கு டி20 தொடரில் இடமில்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 26-ந்தேதி (வியாழக்கிழமை) அபுதாபியில் தொடங்குகிறது. 2-வது போட்டி 27-ந்தேதி அதே மைதானத்தில் நடக்கிறது. 3-வது போட்டி லாகூரில் நடக்க இருக்கிறது.
இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 2009-ம் ஆண்டில் இருந்து எந்த அணியில் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. மீண்டும் சர்வதேச போட்டியை புதுப்பிக்கும் வகையில் இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்கு இலங்கை அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.
ஆனால் இலங்கை அணியின் பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கிறார்கள். கேப்டன் உபுல் தரங்கா மற்றும் மலிங்கா ஆகியோர் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘‘லாகூர் போட்டிக்கும் சேர்ந்துதான் இலங்கை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் லாகூர் போட்டியில் விளையாடவும் தயாராக வேண்டும்’’ என அந்நாட்டு தலைமை தேர்வாளர் கிரேம் லேப்ரூய் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வீரர்களிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதிக்கும் அணியை அறிவிக்க உள்ளது.
இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் 2009-ம் ஆண்டில் இருந்து எந்த அணியில் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவில்லை. மீண்டும் சர்வதேச போட்டியை புதுப்பிக்கும் வகையில் இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்தது. இதற்கு இலங்கை அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.
ஆனால் இலங்கை அணியின் பெரும்பாலான வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுக்கிறார்கள். கேப்டன் உபுல் தரங்கா மற்றும் மலிங்கா ஆகியோர் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘‘லாகூர் போட்டிக்கும் சேர்ந்துதான் இலங்கை வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். நாங்கள் தேர்வு செய்யும் வீரர்கள் லாகூர் போட்டியில் விளையாடவும் தயாராக வேண்டும்’’ என அந்நாட்டு தலைமை தேர்வாளர் கிரேம் லேப்ரூய் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வீரர்களிடமும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இறுதியில் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதிக்கும் அணியை அறிவிக்க உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X