என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதலிடம்
Byமாலை மலர்19 Oct 2017 4:04 PM GMT (Updated: 19 Oct 2017 4:04 PM GMT)
வங்காள தேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென்ஆப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் முதல் இடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்தது.
தற்போது தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் 120 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், தென்ஆப்பிரிக்கா தசமபுள்ளி அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும்.
தற்போது தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளும் 120 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால், தென்ஆப்பிரிக்கா தசமபுள்ளி அடிப்படையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்தை பிடிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X