search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை
    X

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்கும்: யூனிஸ்கான் நம்பிக்கை

    சாம்பியன்ஸ் டிராபி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று முன்னாள் பேட்ஸ்மேன் யூனிஸ்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் வியாழக்கிழமை (ஜூன்-1) தொடங்குகிறது. ஜூன் 4-ந்தேதி நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் உள்பட கிரிக்கெட் விமர்சகர்கள் இந்தியா வெற்றிபெறும், பாகிஸ்தான் வெற்றி பெறும். பாகிஸ்தானின் பந்துவீச்சு இந்தியாவின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்கும் என ஆருடம் கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னைக் கடந்த ஒரே பாகிஸ்தான் வீரருமான யூனிஸ்கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி குறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘தற்போதைய பாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்தக்கூடிய திறமை உள்ளது. கடந்த காலங்களில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியுள்ளது.

    பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக உள்ளது. என்னுடைய கருத்து என்னவெனில், சாம்பியன்ஸ் டிராபியில் 400 ரன்னைக்கூட எளிதாக சேஸிங் செய்துவிடலாம். 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் பீல்டிங் மிகவும் முக்கியமானது. அதில் பாகிஸ்தான் அணி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு கேட்ச் வாய்ப்பையும் தவற விட்டுவிடக்கூடாது’’ என்றார்.
    Next Story
    ×