search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி ஆட்டம்: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்னில் வெற்றி
    X

    பயிற்சி ஆட்டம்: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்னில் வெற்றி

    நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையினால் தடைபட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 38.4 ஓவரில் 189 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஞ்சி 66 ரன்னும், நீசம் அவுட்டாகாமல் 46 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் மொகமது மற்றும் புவனேஸ்வர் குமார் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரகானேவும், தவானும் களம் இறங்கினார்கள். ரகானே 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன், டோனி ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 26 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. விராட் கோலி 52 ரன்னுடனும், டோனி 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 26 ஓவர் முடிவில் 84 ரன்கள் எடுத்திருந்தலே வெற்றிக்கு போதுமானது. ஆகையால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    30-ந்தேதி நடைபெறும் 2-வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×