search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து 330 ரன்கள் குவிப்பு- ஸ்டோக்ஸ் சதம்
    X

    2-வது ஒருநாள்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து 330 ரன்கள் குவிப்பு- ஸ்டோக்ஸ் சதம்

    பென் ஸ்டோக்ஸின் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் குவித்துள்ளது.
    இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் சவுதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

    தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 8 ரன்கள் எடுத்த நிலையிலும், ஹேல்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.


    ஜோஸ் பட்லர்

    அதன்பின் வந்த ஜோ ரூட் 39 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 79 பந்தில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அவுட்டாகாமல் 53 பந்தில் 7 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 10 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×