என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம்: டி வில்லியர்ஸ்
Byமாலை மலர்21 May 2017 8:05 AM GMT (Updated: 21 May 2017 8:06 AM GMT)
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என்று தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 8 அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்தும், வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் டி வில்லியர்ஸ் கூறுகையில், இங்கிலாந்து அணியை தற்போது குறைத்து எடைபோட வேண்டாம் என்று டி வில்லியர்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும் இடமுண்டு. எனவே இங்கிலாந்து அணியை குறைவாக எடை போட வேண்டாம்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோடம் எனக்கருதப்படும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றுவது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களுக்கு எதிரான தொடரை 2-3 என்று இழந்த பிறகு, 6 ஒருநாள் தொடர்களில் 5-ல் வென்றுள்ளது.
அதேவேளையில், நாங்களும் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளுக்கு ஒயிட் வாஷ் செய்து வலுவாக உள்ளோம்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புகிறோம். சொந்த நாட்டில் இங்கிலாந்துது அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது.
2015 உலகக் கோப்பை தோல்விகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பெரிய சக்தியாக விளங்குகிறது. தற்போதைய இங்கிலாந்து அணி திறமை வாய்ந்தது. இந்தியா கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றத. ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை வெல்ல போராடும்’’
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார.
இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்தும், வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் டி வில்லியர்ஸ் கூறுகையில், இங்கிலாந்து அணியை தற்போது குறைத்து எடைபோட வேண்டாம் என்று டி வில்லியர்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும் இடமுண்டு. எனவே இங்கிலாந்து அணியை குறைவாக எடை போட வேண்டாம்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோடம் எனக்கருதப்படும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றுவது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களுக்கு எதிரான தொடரை 2-3 என்று இழந்த பிறகு, 6 ஒருநாள் தொடர்களில் 5-ல் வென்றுள்ளது.
அதேவேளையில், நாங்களும் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளுக்கு ஒயிட் வாஷ் செய்து வலுவாக உள்ளோம்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புகிறோம். சொந்த நாட்டில் இங்கிலாந்துது அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது.
2015 உலகக் கோப்பை தோல்விகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பெரிய சக்தியாக விளங்குகிறது. தற்போதைய இங்கிலாந்து அணி திறமை வாய்ந்தது. இந்தியா கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றத. ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை வெல்ல போராடும்’’
இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X