search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: சாம்பியன் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகை
    X

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: சாம்பியன் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகை

    இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 (ரூ. 141186100) மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி. நடத்தும் 8 முன்னணி அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

    இதில் சாம்பியின் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து 2-வது இடத்தை பெறும் அணிக்கு 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடியே 5 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையும், ஒட்டு மொத்தமாக 4.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

    2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தொகையை விட 5 லட்சம் டாலர் அதிகமாகும். அரையிறுதிக்கு முன்னேறும் மற்ற இரண்டு அணிகளுக்கு தலா 4 லட்சத்து 50 அயிரம் டாலரும், ஒவ்வொரு பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு தலா 90 ஆயிரம் டாலரும், ஒவ்வொரு பிரிவில் கடைசி இடத்தை பிடிக்கும் அணிக்கு தலா 60 ஆயிரம் டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும அறிவித்துள்ளது.
    Next Story
    ×