என் மலர்
செய்திகள்

காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து மெக்கல்லம் விலகல்
குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள பிராண்டன் மெக்கல்லம் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆட்டக்காரரும் ஆன பிராண்டன் மெக்கல்லம் ஐ.பி.எல். தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்த பிராண்டன் மெக்கல்லத்திற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். தற்போது குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
மும்பைக்கெதிரான சூப்பர் ஓவர் உள்பட 12 இன்னிங்சில் விளையாடிய மெக்கல்லம் 320 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 72 ஆகும். இரண்டு அரைசதங்களும், 29 பவுண்டரிகளும், 18 சிக்சர்களம் விளாசியுள்ளார்.
இதனால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். தற்போது குஜராத் அணி 11 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
மும்பைக்கெதிரான சூப்பர் ஓவர் உள்பட 12 இன்னிங்சில் விளையாடிய மெக்கல்லம் 320 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 72 ஆகும். இரண்டு அரைசதங்களும், 29 பவுண்டரிகளும், 18 சிக்சர்களம் விளாசியுள்ளார்.
Next Story






