search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு போட்டியில் விளையாட தடை: மெஸ்சியின் தண்டனையை ரத்து செய்தது பிஃபா மேல்முறையீடு குழு
    X

    நான்கு போட்டியில் விளையாட தடை: மெஸ்சியின் தண்டனையை ரத்து செய்தது பிஃபா மேல்முறையீடு குழு

    அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் நான்கு போட்டிக்கான தடையை பிஃபா மேல்முறையீடு குழு ரத்து செய்துள்ளது. இதனால் உருகுவே, வெனிசுலா, பெரு நாடுகளுக்கு எதிராக விளையாடுகிறார்.
    அர்ஜென்டினா அணியின் கேப்டனும், பார்சிலோனா அணியின் முன்னணி வீரருமான மெஸ்சி, சிலி நாட்டிற்கு எதிரான போட்டியின்போது நடுவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய உலக கால்பந்து நிர்வாகக்குழு நான்கு போட்டியில் விளையாட மெஸ்சிக்கு தடைவிதித்தது.

    இதனால் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் மெஸ்சி பொலிவியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல் போனது. இதில் அர்ஜென்டினா 0-2 என தோல்வியடைந்தது.

    இன்னும் உருகுவே, வெனிசுலா மற்றும் பெரு நாட்டிற்கு எதிராக அர்ஜென்டினா விளையாட வேண்டியுள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடினால்தான் நேரடியாக உலகக்கோப்பைக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில் அர்ஜென்டினா உள்ளது.

    இதனால் மெஸ்சிக்கான தடையை எதிர்த்து பிஃபாவின் மேல்முறையீடு குழுவிடம் அர்ஜென்டினா சார்பிலும், மெஸ்சி சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மெஸ்சின் தடை உத்தரவை பிஃபா ரத்து செய்தது. மேலும் சுமார் 10 ஆயிரம் டாலர் அபராதத்தையும் ரத்து செய்தது.

    இதனால் ஆகஸ்ட் 31-ந்தேதி உருகுவேயிற்கு எதிரான போட்டியிலும், வெனிசுலாவிற்கு எதிராக செப்டம்பர் 5-ந்தேதியிலும், பெருவிற்கு எதிராக அக்டோபர் 5-ந்தேதி நடக்கும் போட்டியிலும் மெஸ்சி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×