என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Byமாலை மலர்30 April 2017 1:12 PM GMT (Updated: 30 April 2017 1:12 PM GMT)
மொகாலியில் நடைபெற்ற போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் 73 பந்துகள் மீதமுள்ள நிலையில் டெல்லி அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி சந்தீப் ஷர்மாவின் அபார பந்து வீச்சால் 67 ரன்னில் சுருண்டது. பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
மார்ட்டின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா நிதானமாக விளையாட மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தும், அம்லா 20 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மூலம் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி சந்தீப் ஷர்மாவின் அபார பந்து வீச்சால் 67 ரன்னில் சுருண்டது. பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.
மார்ட்டின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா நிதானமாக விளையாட மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தும், அம்லா 20 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மூலம் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X