

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க புதிய வழிமுறையினை கூகுள் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதை கொண்டு மக்கள் பொது வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை மீறுகிறோமா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்மார்ட்போனினை நடுவில் வைத்துக் கொண்டு நடக்கும் போது, அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் திரையில் அதற்கான எச்சரிக்கை தகவல் தெரியும். இவ்வாறு பொதுவெளியில் செல்லும் போது சமூக இடைவெளியினை மிக துல்லியமாக கடைப்பிடிக்க முடியும்.