search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loss of lives"

    • 2020ல் பரவிய கொரோனா பெருந்தொற்று லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது
    • கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசியே புதிய திரிபிலிருந்தும் காக்கும் என்றார் டெட்ரோஸ்

    2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

    இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.

    2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.

    உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.

    பெருந்தொற்று பரவலை தடுக்க இந்தியா உட்பட பல உலக நாடுகள் மாதக்கணக்காக ஊரடங்கை பிறப்பித்தன. இதனால், பெருமளவு தொழில் முடக்கம் மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான உயிர்சேதத்தினாலும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினாலும் உலகையே அச்சுறுத்திய கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி கொள்ள அறிவுறுத்தின.

    இதன் பயனாக தொற்றினால் தாக்கப்படுபவர்கள் குறைய தொடங்கினர்.

    2022 தொடக்கம் முதல் இந்தியாவில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குறைந்தனர்.

    2023 மே மாதம் உலக சுகாதார அமைப்பு, கோவிட் பெருந்தொற்றுக்கான சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.

    மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இதுவும் ஓமிக்ரான் (omicron) வகை வைரஸ் என்பதால், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளே இந்த வைரசுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும்.

    மக்கள் தடூப்பூசி இன்னமும் செலுத்தி கொள்ளா விட்டால் விரைவாக செலுத்தி கொள்வது நல்லது. அத்துடன் முககவசம் அணிவதும், பணிபுரியும் இடங்கள் மற்றும் வசிக்கும் இடங்ககள் காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

    இவ்வாறு டெட்ரோஸ் கூறினார்.

    • ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க இஸ்ரேல் போரை தொடர்கிறது
    • 58,416 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார துறை தெரிவித்துள்ளது

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர்.

    உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது.

    இஸ்ரேலிய ராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது.

    சில பணய கைதிகளை ஹமாஸ் வசத்திடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

    போர்நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

    இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா (Ramallah) பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள்தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

    2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    கடந்த மாதம் இஸ்ரேலிய ராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 80 வருடங்களில் துருக்கியை தாக்கிய கடுமையான நிலநடுக்கம் என ஐ.நா. தெரிவித்தது
    • "ஆபரேஷன் தோஸ்த்" எனும் பெயரில் துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா உதவியது

    தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் எல்லைகளை கொண்ட நாடு, துருக்கி.

    துருக்கியில் பிப்ரவரி 6 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.8 என பசார்சிக் (Pazarcik) மாவட்டத்தில் ஒரு நில நடுக்கம் தாக்கியது. அந்நாட்டில் 80 வருடங்களில் நிகழ்ந்த நில நடுக்கங்களில் இதுவே அதிகமானது என ஐ.நா. சபை தெரிவித்தது.

    மீண்டும் அதே தினம், எல்பிஸ்டான் (Elbistan) மாவட்டத்தில் 7.6 அளவில் மற்றுமொரு நில அதிர்வு தாக்கியது. இந்த நிலநடுக்கம் கடுமையாக இருந்ததால், இதன் தாக்கம் அண்டையில் சிரியா மற்றும் லெபனான் நாடுகளிலும் உணரப்பட்டது.

    மூன்றாவது முறையாக கோக்ஸன் (Goksun) மாவட்டத்தில் 6.0 எனும் அளவில் தாக்கியது.

    இந்த தொடர் நில நடுக்கங்களால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    இந்திய அரசு துருக்கிக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக உறுதியளித்தது. நிவாரண பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் 7 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை "ஆபரேஷன் தோஸ்த்" எனும் நடவடிக்கையில் துருக்கிக்கும் சிரியாவிற்கும் இந்தியா அனுப்பி வைத்தது.

    ×