என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "foreign travel"

    • உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சுமார் ரூ.37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்,.
    • மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார்.

    முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜக சார்பாக முழு மனதுடன் வரவேற்கத் தயாராக உள்ளோம்.

    ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும், ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.

    காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்கள், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 37.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்! மகாராஷ்டிரா முதல்வர் திரு. தேவேந்திர ஃபட்நாவிஸ் அவர்கள், டாவோஸ் பயணத்தில் ₹15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ₹6,100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும், அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை! சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் நிலுவையில் உள்ளன.

    மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024-இன் அமெரிக்கப் பயணத்தில் ₹7.500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.

    கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.

    அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், லஞ்சம். முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்குப் படையெடுக்கும்.

    இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?" என்று தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளதற்காக ரூ.2,021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் கவனம் செலுத்துவதாகவும், இந்திய மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டன.

    இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.2,021 கோடி செலவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமராக மோடி பதவி ஏற்ற கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 10 முக்கிய நாடுகள் உள்பட 55 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பதாகவும், இதற்கான விமான பயண செலவு, விமான பராமரிப்பு கட்டணம் மற்றும் பிரதமருக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்காக இதுவரை ரூ.2,021 கோடி செலவாகி உள்ளது. வெளிநாட்டு பயணம் மூலம் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 77.75 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.#PMModi
    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.1484 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    இதற்காக ரூ.1484 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

    இது தொடர்பாக பாராளுமன்ற மேல்-சபையில் வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விமானத்தை பராமரிக்க மொத்தம் ரூ.1088.42 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    அதே கால கட்டத்தில் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு ரூ.387.26 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் 42 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது 84 வெளிநாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

    கடந்த 2015-16-ம் ஆண்டில் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார். 2016-17-ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும் மோடி சென்றுள்ளார்.

    பிரதமர் மோடியின் பயணத்துக்காக கடந்த 2014- 15-ம் ஆண்டில் தனியார் விமானங்களுக்கு ரூ.93.76 கோடியும், 2015-16-ம் ஆண்டில் ரூ.117 கோடியும், 2016-17-ம் ஆண்டில் ரூ.76.27 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.99.32 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    2018-19-ம் ஆண்டு கால கட்டத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனியார் விமானங்களுக்கு செலவிடப்பட்ட தொகை குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை.

    கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்தும் விரிவாக குறிப்பிடப்படவில்லை.

    வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புகளுக்கு மொத்தம் ரூ.9.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. #PMModi
    ×