என் மலர்
நீங்கள் தேடியது "Dhayalu Ammal"
- தயாளு அம்மாள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தயாளு அம்மாளுக்கு வயிற்று வலி, வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சைக்குப்பிறகு அவர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், தயாளு அம்மாளுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
- உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து தயாளு அம்மாள் மிகவும் துயரத்தில் இருந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து உடனடியாக காரில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும், மு.க.ஸ்டாலினும், அவருடைய குடும்பத்தினரும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.
தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று சீராக இருந்ததால், மாலை 4.30 மணிக்கு சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். #DhayaluAmmal #tamilnews






