என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai ICF"

    • தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
    • 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.

    சென்னை:

    தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி, இருக்கை வசதி கொண்டவை ஆகும். வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில், பார்சல் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில், சாதாரண ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாதாரண வந்தேபாரத் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே 16 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு ஐ.சி.எப்.பில் பல்வேறு சோதனைகள் நடத்தி முடித்து, ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோன்று மேலும் சில தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை ஐ.சி.எப்.புக்கு இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை 88 ரெயில்களை தயாரித்து கொடுத்து விட்டோம். இந்த ரெயில்கள் தெற்கு ரெயில்வே உள்பட பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் இயக்கப்படுகின்றன.

    மீதமுள்ள 9 வந்தே பாரத் ரெயில்கள் இந்த நிதியாண்டுக்குள் தயாரித்து வழங்க முடிவு செய்து உள்ளோம். இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரெயில்களை 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வழங்குவோம். அடுத்த நிதியாண்டில் 24 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியை ஐ.சி.எப்.பில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களைப் பொறுத்தவரை முதல்கட்டமாக 50 ரெயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை ரெயில்வே வாரியம் ஐ.சி.எப்.புக்கு கொடுத்துள்ளது. இவை 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.

    நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரெயில்களை இயக்கும் இலக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.

    • மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படுகிறது.

    சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி இருக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப பணிகளை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாக பயணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது.

    இது உராய்வு மற்றும் எதிர்ப்பை குறைக்க மெக்னடிக் லீவியேஷன் (காந்த சக்தியில் மிதந்து செல்வது) மற்றும் உந்துவிசையை பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளை விட பலமடங்கு அதிவேகமாக செல்லும் திறனை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.

    தற்போதைய சோதனைகளின் படி ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹைப்பர்லூப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

    இதற்காக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு குழு ஹைப்பர்லூப் பாட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இந்த சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பாட் வழக்கமாக ரெயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதை போல் இல்லாமல், காந்த லீவியேஷன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனை நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க ஐ.ஐ.டி. மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது," என்று தெரிவித்தார்.

    தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் சென்னையிலேயே துவங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ஐ.சி.எஃப்.-இல் உருவாக்கப்பட உள்ளது. 



    சென்னை ஐ.சி.எப். தயாரித்த என்ஜின் இல்லாத முதல் செமி புல்லட் ரெயில் சோதனை வெள்ளோட்டம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று வெற்றிகரமாக நடந்தது.#ICF #SemiHighSpeedTrain #Train18
    லக்னோ:

    இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

    ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.



    'Train-2018' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு முதல் ரெயில் அழகாக நகர்ந்து செல்லும் வீடியோ யூ டியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியானது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி, பயோ கழிப்பறைகள், ரெயிலின் உள்ளே இலவச வைஃபை வசதி, விமானத்தில் உள்ளதுபோல் தானியங்கி கதவுகள், சொகுசான இருக்கைகள், ஓடும் ரெயிலினுள் முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டிவரை நடந்து செல்லும் வசதி, எவ்வளவு வேகத்தில் சென்றாலும் கடினமான அதிர்வு மற்றும் குலுங்கல்களை தவிர்க்கும் ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ரெயில் பெட்டிகளில் உள்ளன.

    மேலும் இந்த ரெயிலில் உள்ள இருக்கைகள் 360 டிகிரி கோணத்தில் சுழலும் வசதி கொண்டவை. இதன் மூலம் ரெயில் எந்த திசையை நோக்கி செல்கிறதோ, அதற்கேற்ப நமது விருப்பம் போல் திரும்பி அமர்ந்தவாறு பயணிக்கலாம்.



    இதர ரெயில்களில் உள்ளதைப்போல் பெட்டிகளில் இருந்து என்ஜினை கழற்றி, மாட்டுவது போலன்றி, 16 பெட்டிகளுடன் என்ஜினும் ஒரே அமைப்பாக இணைந்தே இருக்கும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும். இதற்கென தனியாக என்ஜின் கிடையாது.

    விரைவில் டெல்லி-லக்னோ அல்லது டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் இந்த முதல் செமி புல்லட் ரெயில் மூலம் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மோராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி தண்டவாளத்தில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. ரெயில்வே துறையின் சிக்னல், பாதுகாப்பு பிரிவு மற்றும் பொறியாளர்கள் குழுவினர் இந்த வெள்ளோட்டத்தை பார்வையிட்டு திருப்தி தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா - சாவாய் மோதோப்பூர் வழித்தடத்தில் இந்த ரெயில் மணிக்கு 200 கிலோமீட்டர் என்னும் அதிகபட்ச வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். பின்னர், பயணிகளுக்கான இந்த அதிநவீன ரெயில் சேவை தொடங்கும்.  #ICF #SemiHighSpeedTrain #Train18
    சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரான அதிநவீன செமி புல்லட் ரெயில் பெட்டிகளின் வீடியோ வெளியாகியுள்ளது. #ICF #SemiHighSpeedTrain
    சென்னை:

    இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் புல்லட் ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரெயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.

    ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு ரெயில்களுக்கான பெட்டிகளை சென்னை வில்லிவாக்கம் அருகில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.

    'Train-2018' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு முதல் ரெயில் அழகாக நகர்ந்து செல்லும் வீடியோ யூ டியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி, பயோ கழிப்பறைகள், ரெயிலின் உள்ளே இலவச வைஃபை வசதி, விமானத்தில் உள்ளதுபோல் தானியங்கி கதவுகள், சொகுசான இருக்கைகள், ஓடும் ரெயிலினுள் முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டிவரை நடந்து செல்லும் வசதி, எவ்வளவு வேகத்தில் சென்றாலும் கடினமான அதிர்வு மற்றும் குலுங்கல்களை தவிர்க்கும் ஷாக் அப்சார்பர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ரெயில் பெட்டிகளில் உள்ளன.

    இதர ரெயில்களில் உள்ளதைப்போல் பெட்டிகளில் இருந்து என்ஜினை கழற்றி, மாட்டுவது போலன்றி, 16 பெட்டிகளுடன் என்ஜினும் ஒரே அமைப்பாக இணைந்தே இருக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

    விரைவில் டெல்லி-லக்னோ அல்லது டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் இந்த முதல் செமி புல்லட் ரெயில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ICF #SemiHighSpeedTrain



    ×