என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Priya Prakash Varrier"

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'
    • பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து நெகிழ்ச்சி பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " இந்த படத்தில் உங்களுடன் நடித்ததில் பெருமை கொள்கிறேன். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரை படக்குழுவில் உள்ள அனைவரையும் நீங்கள் கவனித்துக் கொண்டதை பார்த்து பூரிப்பு அடைகிறேன். உங்களுடைய செலவு செய்த நேரத்தை என்றும் மறக்க மாட்டேன். எவ்வலவு உயரம் போனாலும் உங்களைப் போல் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். மீண்டும் உங்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்." என கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடிஎஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

    • அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
    • பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார்.

    திரைப்படத்தில் அஜித்தின் பழைய படங்களின் ரெஃபெரன்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. சிம்ரன் பங்கு பெறும் காட்சி திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. திரைப்படத்தில் மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

     

    தற்பொழுது படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து நெகிழ்ச்சி பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " இந்த படத்தில் உங்களுடன் நடித்ததில் பெருமை கொள்கிறேன். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரை படக்குழுவில் உள்ள அனைவரையும் நீங்கள் கவனித்துக் கொண்டதை பார்த்து பூரிப்பு அடைகிறேன். உங்களுடைய செலவு செய்த நேரத்தை என்றும் மறக்க மாட்டேன். எவ்வலவு உயரம் போனாலும் உங்களைப் போல் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். மீண்டும் உங்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்." என கூறியுள்ளார்.

    மலையாள பாடலில் புருவங்களை அசைத்தும் கண் சிமிட்டியும் நடித்த பிரியா வாரியருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. #PriyaVarrier #PriyaPrakashVarrier #WinkSong
    மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘‘மாணிக்ய மலராய பூவி’’ பாடலில் பிரியா வாரியரின் கண் அசைவுகளும் காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதும் இளைஞர்களை சுண்டி இழுப்பதாக அமைந்தது. இந்த காட்சிகள் ‘யூ- டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி, ஒரே நாளில் நாடு முழுவதும் இளைஞர்களை கவர்ந்துவிட்டார்.



    இந்நிலையில் பிரியா வாரியரின் கண் சிமிட்டும் காதல் பாடலை எதிர்த்து தெலுங்கானா மற்றும் மும்பை மாநில காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த பாடல் இதன் மூலம் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்துவதாக புகார் மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார்களில் பிரியா வாரியரை குற்றம் சாட்டப்படும் முதல் நபராகவும், படத்தின் இயக்குநரை இரண்டாவது நபராகவும் சேர்க்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்குகளை எதிர்த்து பிரியா வாரியர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியா வாரியர் மற்றும் இயக்குனர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PriyaVarrier #PriyaPrakashVarrier #WinkSong

    ×