3-வது நாளாக இன்றும் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 173 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

கடந்த 6-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினை 2-வது நாளாக நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் 120-க்கும் மேற்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள், தங்கள் மாவட்ட செயலாளர்களுடன் சந்தித்தனர். அப்போது, தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com